For Daily Alerts
Just In
ஒரு பக்க மீசையை இழந்த அதி்முக பிரமுகர்!
விளாத்திகுளம்: திருமங்கலம் இடைத் தேர்தலி்ல் அதிமுக தோல்வியுற்றதால், வெற்றி பெறும் என பந்தயம் கட்டிய அதிமுக பிரமுகர் ஒரு பக்க மீசையை எடுத்துள்ளார்.
விளாத்திகுளம் பேரூராட்சி தலைவியாக இருப்பவர் புவனேஸ்வரி. இவரது கணவர் முருகேசன். திமுக உறுப்பினராக உள்ளார். இவரிடம் அதிமுக பிரமுகர் பாலமுருகன் என்ற குரங்கு முருகன் என்பவர் திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்.
அப்படி இல்லாவிட்டால் எனது ஒரு பக்க மீசையை மழித்து கொள்கிறேன் என்று பந்தயம் கட்டினார்.
இந்நிலையில் திருமங்கலத்தில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் லதா அதியமான் வெற்றி பெற்றார்.
இதையடுத்து ஏற்கனவே சொன்னபடி, பாலமுருகன் விளாத்திகுளத்தில் உள்ள சலூனில் தனது ஒரு பக்க மீசையை மழித்துக் கொண்டார்.
Comments
Story first published: Tuesday, January 13, 2009, 12:40 [IST]