For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறைகளில் ஜாமர்களால் பயனில்லை:டிஜிபி

By Sridhar L
Google Oneindia Tamil News

நெல்லை: தமிழக சிறைகளில் பொருத்தப்படும் ஜாமர் கருவிகளினால் போதிய பயன் கிடைக்கவில்லை என டிஜிபி நட்ராஜ் தெரிவித்தார்.

நெல்லையில் நிருபர்களிடம் சிறைத்துறை டிஜிபி நட்ராஜ் பேசுகையில், தமிழக மத்திய சிறைகளில் கடந்த 2007ம் ஆண்டு 93 செல்போன்களும், 2008ம் ஆண்டு 156 செல்போன்களும் பறிமுதல் செய்யப்படடன.

சென்னை புழல் சிறையில் 200 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டது. ஆனால் முழுமையான பலனை கொடுக்கவில்லை. அதற்கு பல கோடி ரூபாய் வரை ஒதுக்க வேண்டியுள்ளது. அவற்றை முழுமையாக பொருத்தமுடியாது. இருந்தாலும் தற்போது ஜாமர் கருவிகளை மத்திய சிறைகளில் பொருத்த பரிசோதனை அடிப்படையில் முயற்சிகள் செய்து வருகிறோம்.

சில தொழிற்சாலைகள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கைதிகளுக்கு தொழிற்கல்வி அளித்து வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு முன் வந்துள்ளனர். இதனால் தண்டனை முடிந்து செல்லும் கைதிகள் தங்களது சுய தொழி்ல் மூலம் தங்களது வாழ்க்கையை மேம்படுத்தி கொண்டு சமுதாயத்திற்கு நன்மை செய்திட முடியும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X