For Daily Alerts
Just In
பெண் வயிற்றில் 16 கிலோ கட்டி அகற்றம் !
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கலங்காட்டூரைச் சேர்ந்த பெண் ஒருவருடைய வயிற்றில் இருந்து சுமார் 16 கிலோ கட்டியை டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கலங்காட்டூரைச் சேர்ந்தவர் மருதுபாண்டி. விவசாயி. இவருடைய மனைவி ஆறுமுகம் (42). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆறுமுகத்திற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டரிடம் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அதில் அவரது வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, டாக்டர்கள் மோகன் பிரசாத், சந்திரசேகர், ஜெகதீஸ்சிங் , சுந்தராஜன், ஆகியோர் அடங்கிய குழு ஆபரேஷன் செய்தது. எட்டரை மணி நேரம் ஆபரேஷனுக்கு பின் வயிற்றில் இருந்த 16 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர்.
Comments
Story first published: Tuesday, January 20, 2009, 14:19 [IST]