For Daily Alerts
Just In
கோவை மாணவிக்கு ரூ.1 லட்சம்-கருணாநிதி
கோவை: இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவை மாணவிக்கு முதல்வர் கருணாநிதி தனது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கோவை அருகே சரவணம்பட்டியில் உள்ள சங்கரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் முதலாண்டு பட்டயப் படிப்பு படித்து வருபவர் ஷோபனா. இவர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை இதயகோளாறு காரணமாக மரணமடைந்துவிட்டார்.
இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. இதையடுத்து கல்லூரி நேரம் போக மீத நேரங்களில் பொம்மை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
இதையறிந்த முதல்வர் கருணாநிதி ஷோபனாவின் படிப்பு உதவிக்காக தனது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Comments
Story first published: Tuesday, January 20, 2009, 13:51 [IST]