விப்ரோ காலாண்டு லாபம் 1,003.9 கோடி!
மும்பை: விப்ரோ நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் ரூ.1,003.90 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலாண்டை விட இது 3.51 சதவீதம் அதிகம். இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.969.80 கோடியை லாபமாக சம்பாதித்திருந்தது.
விப்ரோவின் மொத்த விற்பனைத் தொகை கடந்த காலாண்டில் ரூ.6,519.60 கோடியாக இருந்தது. இப்போது 1.75 சதவீதம் உயர்ந்து ரூ.6,634.30 கோடியாக உள்ளது. அதே நேரம் நிகர விற்பனை ரூ.540.50 கோடியிலிருந்து ரூ.539.70 கோடியாகக் குறைந்துள்ளது.
இந்த மூன்றாவது காலாண்டில் மட்டும் 31 புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது விப்ரோ.
விப்ரோ புராடக்ட்ஸ் கடந்த ஆண்டைவிட இந்த முறை வர்த்தகத்தில் 25 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
அதே போல விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்னிங் பிரிவில் 21 சதவீத வருவாய் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இந்த மூன்றாவது காலாண்டில்தான் விப்ரோ நிறுவனம் உலக வங்கியால் 4 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.