For Quick Alerts
For Daily Alerts
Just In
விமானப் படை விமான விபத்து-விமானி பலி
பீதர்: இந்திய விமானப் படையில் 'ஏரோபாட்டிக்ஸ்' சாகஸங்கள் செய்யும் சூர்யா கிரண் குழுவைச் சேர்ந்த பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார்.
கர்நாடக மாநிலம் பீதர் அருகே பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விமானி ஆர்.எஸ். தாலிவால் (29) 'சூர்ய கிரண்' விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
பறந்த சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை விமான தளத்துக்கு திருப்ப முயற்சி மேற்கொண்டார். ஆனால் விமான தளத்துக்கு அருகே வந்தபோது விமானம் தீப்பிடித்து வெடித்து சிதறியது.
இதில் விமானி தாலிவால் பலியானார். விமானப்படை அதிகாரிகள் அந்த விமானத்தின் 'பிளாக் பாக்சை' கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Thursday, January 22, 2009, 12:26 [IST]