For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் - ரசிகர்கள் திடீர் மோதல்

By Sridhar L
Google Oneindia Tamil News

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய மற்றும் போஸ்னிய ரசிகர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் ஒரு பெண் காயமடைந்தார். மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.

இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றுப் போட்டியில் செர்பியாவின் நோவக் டோகோவிச்சுக்கும், போஸ்னியாவில் பிறந்து அமெரிக்காவுக்காக விளையாடும் அமெர் டெலிக் மோதினர். இப்போட்டியில் டோகோவிச் 6-2, 4-6, 6-3, 7-6 என வென்றார்.

இந்நிலையில் இரு நாட்டு ரசிகர்களும் திடீரென மைதானத்துக்குள்ளேயே மோதிக் கொண்டனர். இதில் ஒரு பெண் காயமடைந்தார். மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

போஸ்னியாவும், செர்பியாவும் எலியும், பூனையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சானியா-பூபதி ஜோடி வெற்றி...

இதற்கிடையே, இன்று நடந்த கலப்பு இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மகேஸ் பூபதி, சானியா மிர்சா ஜோடி 6-2, 6-4 என செக் குடியரசின் பவல் விஸ்னர், கேவடா பசெக் ஜோடியை வென்றது.

ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லூகஸ் டவுகி ஜோடி 6-3, 6-4 என இத்தாலியின் பேபியோ போக்னி, குரேஷியாவின் இவா லுசுபிக் ஜோடியை வீழ்த்தியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X