கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 13 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது
சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 13 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி தமிழக காவல்துறை அதிகாரிகள் 13 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ராதாகிருஷ்ணன்- சென்னை நகர போலீஸ் கமிஷனர், கே.ராஜேந்திரன் - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் போலீஸ் டி.ஜி.பி, ரவிக்குமார் - சென்னை டி.ஜி.பி அலுவலக உதவி ஐ.ஜி, கருப்பையா தொண்டிராஜ் - போலீஸ் சூப்பிரண்டு, பி.கேசவன் - போலீஸ் சூப்பிரண்டு, கந்தசாமி ரங்கராஜன் - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, திருநாவுக்கரசு - துணை போலீஸ் சூப்பிரண்டு, சென்னை லஞ்ச ஒழிப்பு, செல்வராஜன் - இன்ஸ்பெக்டர், கோவை லஞ்ச ஒழிப்பு, பன்னீர்செல்வம் - இன்ஸ்பெக்டர், கடலூர் லஞ்ச ஒழிப்பு, குப்புசாமி - இன்ஸ்பெக்டர், விழுப்புரம், சுதாகர் - இன்ஸ்பெக்டர், சென்னை தலைமையகம், ஜீவானந்தம் - இன்ஸ்பெக்டர், சென்னை, அசோகன் - இன்ஸ்பெக்டர், விசேஷ புலனாய்வு பிரிவு சென்னை, காமராஜ் - உதவி ஜெயிலர், சங்ககிரி சப்-ஜெயில், தங்கராஜ் - தலைமை வார்டர், பெரம்பலூர் சப்-ஜெயில்.