ராதிகா தலைமையில் மகளிர் அணி மாநாடு: சரத்
கோவை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மகளிர் அணி மாநாடு, துணைத் தலைவர் ராதிகா தலைமையில் கும்பகோணத்தில் அடுத்த மாதம் நடைபெறும் என கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொடூரமாக கொல்லப்படுவதை ஐ.நா.வும் உறுதிப்படுத்தியுள்ளது. இப்பிரச்சனையில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.
திருமங்கலம் தேர்தலில் ஜனநாயம் வெற்றி பெறவில்லை. பண நாயகமே வெற்றி பெற்றுள்ளது. திருமங்கலம் தேர்தல் எங்களுக்கு ஒரு பயிற்சி களமாக அமைந்துள்ளது.
இயந்திர வாக்குபதிவை பயன்படுத்துவதில் பல தவறுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அதை தடை செய்ய வேண்டும்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர் நிலை கமிட்டி கூட்டம் 29ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
கும்பகோணத்தில் அடுத்த மாதம் கட்சியின் துணைத் தலைவர் ராதிகா தலைமையில் மகளிர் அணி மாநாடு நடைபெறும் என்றார்.