சத்யம் நிறுவனத்தை வாங்க போட்டா போட்டி
சத்யத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் எல் அண்டு டி நிறுவனம் ஏற்கெனவே இதற்கான ஒரு திட்டத்தை இயக்குநர் குழு பரிசீலனைக்கு அனுப்பிவிட்டது. இந்த நிலையில் இப்போது ஸ்பைஸ் குழுமமும் சத்யம் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த 51 சதவிகித பங்குகளுக்கு மொத்தம் ரூ.2500 கோடியைத் தர ஸ்பைஸ் முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னும் சில நிறுவனங்கள் சத்யம் நிறுவனப் பங்குகளின் இப்போதைய விலையை விட குறிப்பிட்ட சதவிகிதம் கூடுதலாக வைத்துத் தரவும் முன்வந்துள்ளன.
அவற்றில் முக்கியமானவை ஐகேட் மற்றும் ஷிவ் நாடாரின் எச்சிஎல் டெக்னாலஜிஸ்.
எஸ்ஸார் குழுமமும் போட்டியில் குதித்துள்ளது.
எந்த நிறுவனத்துக்கு சத்யத்தின் 51 சதவிகித பங்குகளை விற்பது என்பதில் இயக்குநர் குழு எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், பங்குச் சந்தையே இந்த டீலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
சத்யத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் கிராக்கியால், நேற்று சத்யம் பங்குகள் மேலும் 8 சதவிகிதம் உயர்ந்து 54.05க்கு கைமாறியது.