நாளைய வேலைநிறுத்தத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு
சென்னை: இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், டாக்டர்கள், வக்கீல்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு பாஜக நேற்று ஆதரவு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக நாளை நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
கட்சியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் இந்த போராட்டத்திலும், 7-ந்தேதி நடைபெறும் கறுப்புக்கொடி ஊர்வலத்திலும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.