For Daily Alerts
Just In
புதுச்சேரியில் பந்த் முழுமை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் பந்த் கிட்டத்தட்ட முழு அளவில் இருந்தது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பந்த் நடத்தப்பட்டது.
இதையொட்டி அங்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பள்ளிகள் மட்டும் இயங்கின.
போலீஸ் பாதுகாப்புடன் ஓரளவு பஸ்களே இயக்கப்பட்டன. பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இல்லை. கிட்டத்தட்ட முழு அளவில் மக்கள் பந்த்துக்கு ஆதரவு அளித்திருந்தனர்.
தனியார் தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்டவை ஓடவில்லை. தனியார் பேருந்துகளும் ஓடவில்லை.
பந்த்தையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, February 4, 2009, 18:23 [IST]