நாகூர் தர்காவில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது !
நாகூர்: நாகூர் தர்காவில் வட நாட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர் தர்க்காவில் நேர்த்திக் கடன் செலுத்த தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பூனே அடுத்த டிங்கர் நகரைச் சேர்ந்தவர் நூர் அகமது(35). இவரது மனைவி ஷப்னம் (21). இவர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்த நாகூர் தர்க்காவுக்கு வந்தனர்.
அப்போது ஷப்பனம் தர்க்காவில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த போது அருகில் இருந்த நாகூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்த இர்ஷாத்(18) என்பவர் ஷப்பனத்தின் புடவையை இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதை அறிந்த நூர் முகமது, இர்ஷாத்தை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இர்ஷாத், நூர் அகமதுவை கடுமையான சொற்களில் திட்டி, தாக்கியுள்ளார்.
இது குறித்து நூர் முகமது, நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இர்ஷாத்தை கைது செய்தனர்.