சிரஞ்சீவிக்கு ஒரே சின்னம் இல்லை - கைவிரித்தது தேர்தல் ஆணையம்
ஐதராபாத்: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என கூறி தேர்தல் கமிஷன் அதற்கு தனி சின்னம் ஒதுக்க மறுத்துவிட்டது.
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கடந்த ஆண்டு பிரஜ்ஜா ராஜ்யம் எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் சமீபத்தில் அவர் டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையாளர் கோபாலசாமியை சந்தித்து வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு பொது சின்னத்தை ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அவரது, கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டது.
இது குறித்து பிரஜ்ஜா ராஜ்யம் கட்சிக்கு தேர்தல் கமிஷன் எழுதியுள்ள கடிதத்தில், அங்கீரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொதுவான தேர்தல் சின்னம் ஒதுக்கப்படும். அதனால் தங்களுக்கு தற்போது பொதுவான சின்னம் வழங்கப்படாது என்றார்.
இது குறித்து நிஜாமாபாத்தில் நடந்த கூட்டத்தில் சிரஞ்சீவி கூறுகையில், தேர்தல் கமிஷனின் இந்த முடிவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்றார்.