இலங்கை தமிழர் நல உரி்மைப் பேரவை பேரணி - ஆர்.எம்.வீ. அழைப்பு
சென்னை: இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவை சார்பில் 8ம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணி மற்றும் பிற பேரணிகள், பொதுக் கூட்டங்களில் எம்.ஜி.ஆர். கழகத் தொண்டர்கள் திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும் என அக்கழகத்தின் நிறுவனர் ஆர்.எம். வீரப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவை சார்பில் நடைபெறும் பேரணிகளிலும், பொதுக் கூட்டங்களிலும் எம்.ஜி.ஆர். கழகத் தோழர்கள் கலந்து கொண்டு தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள பேரவைக்கு ஆதரவை அளிக்க வேண்டும்.
இலங்கை தமிழரை பாதுகாப்பதற்கு போர் நிறுத்தமும், தொடர்ந்து அவர்கள் உரிமை பெற்ற நலவாழ்வையும் பெறு வதற்கு மத்திய அரசின் தீவிர முயற்சியையும் வலியுறுத்தவும் நடைபெறுகிற இந்த முயற்சி வெற்றி பெற எம்.ஜி.ஆர்.கழக தோழர்கள் இதில் ஈடுபட்டுப் பாடுபட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.