For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கஸாப் கூட்டாளிகள் 3 பேர் கராச்சியில் கைது?

By Sridhar L
Google Oneindia Tamil News

Kasab
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் தீவிரவாதி முகம்மது அஜ்மல் கஸாப்புடன் தொடர்புடைய 3 பேரை கராச்சியில் பாகிஸ்தான் உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கராச்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவர்களை உளவுப் பிரிவினர் பிடித்துள்ளனர். இவர்களுக்கும், கஸாப்புக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது மூவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில் இவர்களை இஸ்லாமாபாத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். அங்கு வைத்தோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றியோ தற்போது விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் கைது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. ஆனால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கஸாப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது குறித்து அது கருத்து தெரிவிக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X