For Daily Alerts
Just In
சத்யம் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு ஆந்திர அரசு பரிந்துரை
நாட்டையே உலுக்கிய மிகப் பெரிய மோசடியான சத்யம் ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ஆந்திர அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வந்தது.
இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மீது, தெலுங்கு தேசம் கட்சியினரும், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது காங்கிரஸாரும் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சத்யம் நிறுவன மோசடி விவகாரத்தை சிபிஐ மூலம் விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பரிந்துரைத்துள்ளார்.
இதுதொடர்பாக மன்மோகன் சிங்குக்கு ராஜசேகர ரெட்டி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
Comments
Story first published: Tuesday, February 10, 2009, 12:34 [IST]