For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நரேந்திர மோடி-பாகிஸ்தான் தொடர்பா?-ப.சிதம்பரம்

By Sridhar L
Google Oneindia Tamil News

Chidambaram
டெல்லி: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தானும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஒரே கருத்துத் தெரிவித்துள்ளதால், இருவருக்கும் இடையே தொடர்பு இருக்கிறதோ என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையில் நடந்த தாக்குதலுக்கு இந்தியாவில் உள்ள சில சக்திகளும் தான் காரணம் என்று நாக்பூரில் கடந்த வாரம் நடந்த பாஜக கூட்டத்தி்ல் பேசிய நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்தத் தாக்குதலுக்கு உள்நாட்டு சக்திகளே காரணம் என்று பாகிஸ்தான் அரசும் கூறி வருகிறது.

இந் நிலையில் நிருபர்களை சந்தித்த சிதம்பரத்திடம், மும்பை விவகாரத்தில் பாகிஸ்தானின் கருத்தும், நரேந்திர மோடியின் கருத்தும் ஒன்றாக உள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டன்.

இதற்கு பதிலளித்த சிதம்பரம், பாகிஸ்தான் தலைவர்களுக்கும், நரேந்திர மோடிக்கும் தொடர்பு உள்ளதா என்பதை மோடியிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றார்.

இதையடுத்து டேமேஜ் கண்ட்ரோலில் இறங்கிய மோடி, இந்த விவகாரத்தில் நான் தெரிவித்த கருத்துக்கள் பத்திரிக்கை, டிவிக்களி்ல் தவறாக வெளிவந்துவிட்டதாகக் கூறி சமாளித்தார்.

மேலும், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடித் தொடர்பு உள்ளது. ஆனாலும் உள்ளூர் சக்திகளின் உதவி இல்லாமல் இதை நிகழ்த்தி இருக்க முடியாது என்று தான் நான் சொன்னேன். எனவே இந்தக் கோணத்திலும் இந்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று மட்டுமே தான் நான் கருத்துத் தெரிவித்தேன் என்றார் மோடி.

வழக்கமாக மோடி தான் பேசியதையோ, செய்த செயல்களையோ மறுக்கவே மாட்டார். ஆனால், அவரை சிதம்பரம் தனது முறையில் மடக்கியதால் வேறு வழியில்லாமல் இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X