இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்-சுனாமி பீதி
ஜகார்தா: இந்தோனேஷியாவின் வடக்கு சுலவேசி தீவில் இன்று காலை மிக பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள், கட்டடங்கள், மருத்துவமனைகள், தேவாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் 17 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
ஒரு மருத்துவமனை இடிந்ததில் தான் பெரும்பாலானவர்கள் காயமடைந்தனர்.
கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிறிய நில அதிர்வுகள் தொடர்ந்தன.
நிலநடுக்கம் ஏற்பட்டதும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். ஆனால் பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
குமரியில் கடல் உள்வாங்கியது:
இந் நிலையில் கன்னியாகுமரியில் இன்று கடல் திடீரென உள் வாங்கியது. சுமார் 50 அடி தூரம் கடல் உள் வாங்கியதால் அங்கிருந்த கடல்பாறைகளும், பாசிகளும் வெளியே தெரிந்தன.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.