இயக்குநர் சீமான் மீது புதுச்சேரி போலீஸ் வழக்குப் பதிவு
புதுச்சேரி: இயக்குநர் சீமான் மீது புதுச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காக்க வேண்டும், போரை நிறுத்த வேண்டும் என்று கோரி புதுச்சேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களை கடந்த 12ம் தேதி இயக்குநர் சீமான் சந்தித்தார். மாணவர்களிடையே அவர் பேசுகையில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து சீமான் மீது புதுச்சேரி போலீஸார், சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி), பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் (1பி), இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் (124) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
3 பிரிவுகளுமே ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். விரைவில் சீமானைக் கைது செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.