ஒபாமா அறிவித்த நிதிச் சலுகைக்கு செனட் ஒப்புதல்!
வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரத்தை புணருத்தாரணம் செய்ய அதிபர் ஒபாமாவினால் முன் வைக்கப்பட்ட 787 பில்லியன் டாலர் நிதிச் சலுகைத் திட்டத்தை அமெரிக்க செனட் நேற்று முழுமையாக ஆதரித்து அனுமதித்து விட்டது.
பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு வேலை என்ற பிரதான கண்டிஷனுக்கு நிதியுவியைப் பெறும் அனைத்து நிறுவனங்களும ஒப்புக் கொண்டதாலேயே இந்த நிதிச் சலுகைகளுக்கு செனட்டின் ஒப்புதல் உடனடியாகக் கிடைத்துள்ளது.
மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது:
இது போன்றதொரு நெருக்கடி எதிர்காலத்தில் ஏற்படாமலிருக்க ஒருங்கிணைந்த பொருளாதார சீர்திருத்தம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. நமது பொருளாதார சிக்கல்களிலிருந்து உடனடியாக விடுபட, குறுகிய கால முதலீடுகள் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே நீண்ட கால முதலீடுகள் குறித்தும் சிந்திக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
இதுபோன்ற சலுகைகளை அரசு தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்க முடியாது. நாமே பொருளாதார நெறிமுறைகளை வகுத்துக் கொள்வது அவசியம்.
இந்த நெருக்கடியிலிருந்து மீள்வது அவ்வளவு சுலபமானதல்ல. ஒரு சில மாதங்களில் தீரக்கூடியது அல்ல. இப் பிரச்னை தீர சில ஆண்டுகள் ஆகலாம். அரசு, தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், மக்கள் என எல்லோருக்கும் இப் பிரச்னையைத் தீர்ப்பதில் பொறுப்பு உள்ளது என்றார் ஒபாமா.