ஜப்பானை உலுக்கிய பூகம்பம்
ஜப்பானில் நேற்று காலை 6.0 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது இவடே மாகாணம். நேற்று காலை 6.24 மணிக்கு இப்பகுதியில் திடீரென கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் அது 6.0வாக பதிவானது.
இந்த பூகம்பத்தின் மைய பகுதி இவடே மாகாணத்துக்கு அருகில் கடலுக்கு அடியில் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட போதிலும் சுனாமி வருவதற்கான வாய்ப்பு எதுவுமில்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த பூகம்பத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஜப்பானின் தென் கிழக்கு பகுதியான ஆமோரி பகுதியில் அதிகம் உணரப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இது தவிர்த்து இவாடே மாகாணத்துக்கு அருகில் உள்ள மியாகி, டொசிகி, யாமகடா ஆகிய பகுதிகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.