For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமரி: கொரிய கப்பலுக்கு ரூ 98,000 வாடகை

By Sridhar L
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதியில் நிற்கும் கொரிய நாட்டு கப்பல் ரூ. 98,000 வாடகை கட்ட வேண்டும் என தமிழ்நாட்டு கடல்சார் வாரியம் கூறியுள்ளது.

கொரிய நாட்டை சேர்ந்த பிரைட் ஸ்டார் என்ற கப்பலில் வந்தவர்கள் தெரியாமல் விஷ மீன்களை சாப்பிட்டனர். இதையடுத்து கப்பல் ஊழியர்கள் நான்கு பேர் மரணமடைந்தனர். உயிருக்கு போராடிய மற்றவர்களை கன்னியாகுமரி போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இவர்கள் வந்த கப்பல் நடுக்கடலில் தத்தளித்ததை அடுத்து கடந்த 13ம் தேதியில் இருந்து விவேகானந்த கேந்தராவுக்கு சொந்தமான ஏக்நாத் படகு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

கொரிய நாட்டு கப்பல் இந்திய கடல் பகுதியில் நிற்பதால் வாடகை கட்டணமாக ரூ. 98,000யை கட்டுமாறு தமிழ்நாடு கடல்சார் வாரியம் கொரிய நாட்டு கப்பல் உரி்மையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X