For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல்... 'கிளப்பப்படும்' போலீஸ் அதிகாரிகள்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான முன் ஏற்பாடாக, ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய டிஜிபி ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தல் ஏப்ரல் - மே மாத வாக்கில் வரவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.

அதில் ஒரு பகுதியாக, ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள டிஜிபி ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

அதிகாரிகள் தவிர காவலர்களும் கூட படிப்படியாக வேறு வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X