For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ப்ளசண்ட் ஸ்டே'-ஜெ மீதான வழக்கை வாபஸ் பெற்ற திமுக

By Sridhar L
Google Oneindia Tamil News

Jayalalitha
டெல்லி: கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை திமுக திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவோடு சேர்த்து குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதி திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், அவரைக் காப்பாற்றவே இந்த வழக்கை திமுக வாபஸ் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானவோது ஏகப்பட்ட ஊழல் வழக்குகளில சிக்கினார் ஜெயலலிதா. கூடவே அவரது அமைச்சர்களும் சிக்கினர். அதில் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கிய வழக்கில் கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் செல்வகணபதிக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டனர். அப்போது தான் கோவை விவசாயக் கல்லூரி மாணவிகளின் பஸ் தர்மபுரி அருகே அதிமுகவினரால் எரிக்கப்பட்டது. இதில் அப்பாவி மாணவிகள் எரிந்து சாம்பலாயினர். இதில் குற்றம் சாட்டப்பட்ட படுபாவிகளைக் காக்க அதிமுக தீவிரமாக முயன்றது.

ஆனால், இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜெயலலிதாவும் செல்வகணபதியும் விடுதலையாயினர். கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஜெயலலிதா, செல்கணபதியின் இந்த விடுதலையை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரலில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இந் நிலையில் சமீபத்தில் செல்வகணபதி திமுகவில் இணைந்துவிட்டார்.

இந் நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக திமுக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிபதி அரிஜித் பசாயத், நீதிபதி பாண்டா அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது திமுக சார்பில் ஆஜரான சண்முகசுந்தரம், இந்த மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரினார்.

இதையடுத்து மனுவை வாபஸ் பெற நீதிபதிகள் அனுமதித்தனர். இதன்மூலம் இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா தப்பியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X