பங்குச்சந்தை: இது நஷ்ட வா...ரம்!
கடந்த திங்களன்று 330 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவுடன் துவங்கியது வர்த்தகம். தொடர்ந்து 3 நாட்கள் பெரும் சரிவிருந்த பங்குச் சந்தை நேற்றுதான் சற்று நிமிர்ந்தது. ஆனால் இன்று மீண்டும பழைய டிராக்குக்கே திரும்பிவிட்டது. தொடர்ந்து 4 நாட்கள் நஷ்ட வர்த்தகம். இதில் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோசிக்கும் மேல் இழந்து தவிக்கின்றனர் முதலீட்டாளர்கள்.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 199.42 புள்ளிகள் குறைந்து 8843ல் நிலைத்தது. நிப்டியில் 52 புள்ளிகள் குறைந்து குறியீட்டெண் 2736 ஆக இருந்தது.
இன்றைக்கு பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது ஐசிஐசிஐ வங்கிதான். 7 சதவிகித நஷ்டம் ஏற்படுத்தின இதன் பங்குகள். ரிலையன்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, டிசிஎஸ், ரிலையன்ஸ் போன்ற முதல் நிலைப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.
லாபத்தில் கைமாறி பங்குகள்: மாருதி சுசுகி, டில்ப் மற்றும் ஏசிசி
இந்தியாவில் மட்டுமின்றி இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் சரிவுப் போக்கே இந்த வாரம் முழுக்க காணப்பட்டது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் 2.8 சதவிகிதம் அளவு வீழ்ச்சி ஏற்பட்டது.