7 ஐஜிக்கள் மாற்றம் - சென்னைக்கு புதிய போக்குவரத்து கூடுதல் ஆணையர்
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில் குமார் மாற்றப்பட்டார். இதுதவிர 6 ஐஜிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:
- சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுனில்குமார் லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை நிர்வாக பிரிவு ஐ.ஜி. முகமது ஷகில் அக்தர் சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருச்சி ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி. செண்பகராமன் தண்டனை அமலாக்க பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை தண்டனை அமலாக்க பிரிவு ஐ.ஜி. எம்.கே.ஜா அங்கிருந்து மாற்றப்பட்டு, மாநில குற்ற ஆவண காப்பக ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிவில் சப்ளை சி.ஐ.டி. ஐ.ஜி. ஆஷிஷ் பங்ரா சென்னை நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார்.
- மாநில குற்ற ஆவண காப்பக ஐ.ஜி. லட்சுமி பிரசாத், சென்னை தொழில்நுட்ப ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார்.
- சென்னை தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி. சி.வி.ராவ், ரெயில்வே ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். ரெயில்வே ஐ.ஜி.யாக இருந்த உமா கணபதி சாஸ்திரி மத்திய அரசு பணிக்கு செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.