சன் மைக்ரோசிஸ்டம்-பெங்களூரில் 150 பேர் நீக்கம்
டெல்லி: பெங்களூரில் உள்ள தனது அலுவலகத்தில் வேலை பார்த்த 150 ஊழியர்களை சன் மைக்ரோசிஸ்டம் பணி நீக்கம் செய்துள்ளது.
உலக பொருளாதார நெருக்கடி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை உண்டு இல்லை என ஒரு வழி செய்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருகின்றனர்.
வேலை குறைப்பில் இறங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் துவக்கத்தில் இந்தியக் கிளைகள் மீது கை வைக்காமல் இருந்தன. தற்போது நெருக்கடி அதிகரிக்க இந்திய பணியாளர்களும் தப்ப முடியவில்லை.
இந்நிலையில் பொருளாதார வீழ்ச்சியை காரணம் காட்டி சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனம் பெங்களூரில் உள்ள தங்கள் கிளையில் வேலை பார்த்து வந்த 150 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இது கடந்த மாத இறுதியில் நடந்துள்ளது.
இந்நிலையில் அந்நிறுவனம் இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு முறை பல ஊழியர்களின் வேலையில் கைவைக்க போவதாகத் தெரிவித்துள்ளது.
உலகளாவிய பணி நீக்கங்கள் மூலம் இந்நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 800 மில்லியன் டாலர் அளவுக்கு செலவு குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.