For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்பானி பிரதர்ஸ்: இணைப்பு என்னாச்சு?

By Sridhar L
Google Oneindia Tamil News

Mukesh and Anil
மும்பை: 5 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனித்தனி வர்த்தக சாம்ராஜ்யங்களை உருவாக்கிக் கொண்ட அம்பானி சகோதரர்கள், தங்கள் அம்மா கோகிலாபென்னின் 75-வது பிறந்த நாளையொட்டி இணையப் போவதாக சில தினங்களாக செய்தி வெளியாகிய வண்ணமிருந்தன.

நேற்று கோகிலா பென்னின் பிறந்த தின விழா.

நீண்ட நாட்களுக்குப் பிறகு முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் நேற்று அம்மாவின் வீட்டில் (ஸீ வைண்ட்) சந்தித்துக் கொண்டார்கள். இதே ஸீ வைண்டில்தான் சரியாக 5 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் பாகப் பிரிவினை நடந்தது. இப்போது இணைப்புக்கான முயற்சியும் இங்கிருந்தே தொடங்குகிறது.

அம்மாவின் பிறந்த நாளை இருவரும் இணைந்தே கொண்டாடினார்கள். இருவர் குடும்பங்களும் மகிழ்ச்சியில் திளைத்தன. அவர்களது சகோதரிகளுக்கு அளவற்ற மகிழ்ச்சி. காலையில் கடவுள் வணக்கத்துடன் துவங்கிய இந்த விழாவில், தங்களுக்கு மிக நெருங்கிய 200 நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சைவ விருந்து உண்டு, பழைய இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

உள்ளுக்குள் இணைப்பு பற்றிய பேச்சுக்களை கோகிலாபென் ஏற்கெனவே தொடங்கிவிட்டாலும், அம்பானி குடும்பத்தினர் அதுபற்றி வாய் திறக்காமல் பேரமைதி காக்கின்றனர். ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானியும் இந்த இணைப்பை வலியுறுத்திப் பேசியிருப்பதால், தேர்தலுக்கு முன் சகோதரர்கள் இருவரும் ஒரே குடையின் கீழ் நிர்வாகத்தைக் கொண்டுவந்து விடுவார்கள் என்றே நம்புகிறார்கள் உறவினர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X