For Daily Alerts
Just In
பிரதமருக்கு மன்மோகன் சிங்குக்கு காய்ச்சல்
டெல்லி: சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
கடும் குளிர் ஜுரம் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டுள்ள அவரை முழு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர்.
இதற்கிடையே வீட்டிலிருந்தபடியே அவ்வப்போது அலுவலகப் பணிகளையும் பார்த்து வருகிறார் பிரதமர். இப்போது காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவரை பார்வையாளர்கள் சந்திக்க கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பெரும்பாலான பணிகளை வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் கவனித்து வருகிறார்.
Comments
Story first published: Friday, February 27, 2009, 13:49 [IST]