இலங்கை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய புலிகள்
முல்லைத் தீவி்ல் இன்று காலை 11.25 மணிக்கு குண்டு வீச வந்த இந்த விமானத்தை புலிகள் SAM ((Surface to air missile) ரக ஏவுகணையைக் கொண்டு சுட்டு வீழ்த்தியதாகத் தெரிகிறது.
இரணைப்பாளை என்ற இடத்தில் வைத்து இந்த விமானத்தை புலிகள் தாக்கினர். இதில் அந்த விமானம் வானிலேயே வெடித்துச் சிதறியது.
புலிகளிடம் உள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் ஒலியின வேகத்தில் செல்லும் கிபிர் ரக விமானங்களை வீழ்த்த முடியாது என்று கருதப்பட்டு வந்த நிலையில் இந்த விமானத்தை வீழ்த்தியுள்ளனர் புலிகள்.
புதுக்குடியிருப்புக்கு மேற்கே புலிகள்-ராணுவம் இடையே கடும் மோதல் நடந்து வரும் நிலையில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறிய அதன் பாகங்கள் பல கி.மீ. தூரத்துக்கு சிதறிக் கிடக்கின்றன.
இலங்கை விமானப் படையிடம் இஸ்ரேல் தயாரிப்பான கிபிர் ரக விமானங்கள் மற்றும் மிக்-27 ரக விமானங்களும் உள்ளன. இன்று வீழ்த்தப்பட்ட விமானம் எந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை.