ஜேபி மார்கன் 14000-எச்எஸ்பிசியில் 6100 ஊழியர்கள் நீக்கம்!
ஆனால் லேஹ்மன் பிரதர்ஸ் வீழ்ச்சிக்குப் பிறகு கிட்டத்தட்ட இதன் பங்குகள் விலை பாதிக்கும் மேல் குறைந்ததால், வங்கித் துறையில் முதலிடத்திலிருந்த இருந்த இந்த வங்கி நான்காம் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
இப்போது உரிமைப் பங்குகள் கொண்டு வருவதை பெரும்பாலான பங்குதாரர்கள் ஆதரித்தாலும், இருக்கிற பங்குகளின் விலையை நிலைப்படுத்திய பிறகு இவற்றை வெளியிட யோசனை தெரிவித்துள்ளனர்.
இந்த பங்குகள் வெளியீடு மூலம் திரட்டப்படும் பணத்தைக் கொண்டுதான் அமெரிக்காவில் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யப் போகிறது எச்எஸ்பிசி.
இத்தனைக்கும், இவ்வளவு பொருளாதார தடுமாற்றங்களிலும் கடந்த ஆண்டு லாபம் சம்பாதித்துள்ள (ரூ.9 பில்லியன்) ஒரே வங்கி எச்எஸ்பிசிதான். ஆனால் இந்த லாபம் கடந்த 2007-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 14 பில்லியன் குறைவுதான். இதைச் சரிகட்டவும், வங்கியை ஒரேயடியாக இழுத்து மூடுவதைத் தவிர்க்கவுமே, அமெரிக்காவில் தங்கள் செயல்பாடுகளை தற்காலிகமாக முடக்கி வருகிறது எச்எஸ்பிசி.
ஜோபி மார்கன் சேஸில் 14000 பேர் நீக்கம்!
இதற்கிடையே அமெரிக்க வங்கியான, ஜேபி மார்கன் சேஸ் தனது 14 ஆயிரம் பணியாளர்களை நீக்குகிறது. இவர்களில் 12 ஆயிரம் பேர் அந்த வங்கியின் வாஷிங்டன் ம்யூச்சுவல் யூனிட்டில் இருப்பவர்கள். மீதி 2 ஆயிரம் பேர் முதலீட்டுப் பிரிவில் பணியாற்றுபவர்கள்.
வாஷிங்டன் மியூச்சுவல் பண்டிலிருந்து 9200 பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்று கடந்த டிசம்பரிலேயே ஜேபி மார்கன் சேஸ் அறிவித்திருந்தது.
கடன் இழப்பு, செலவு அதிகரிப்பு போன்றவற்றாலும், பொருளாதார தேக்க நிலையாலும் தடுமாறும் மார்கன் சேஸ், வீட்டுக் கடன் வழங்கியதில் மட்டுமே ஒரு காலாண்டுக்கு 1.4 பில்லியன் டாலர் வரை தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வந்துள்ளது.