For Daily Alerts
Just In
ஸ்டேடியத்தில் 4 வெடிகுண்டுகள் பறிமுதல்
லாகூர்: இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற தீவிரவாதிகள் கடாப் ஸ்டேடியத்தில் விட்டுச் சென்ற 4 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தீவிரவாதிகள் விட்டுச் சென்ற ஏ.கே.47 துப்பாக்கிகள் நிரம்பிய பையையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
2 வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. இவை தவிர மேலும் 2 குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை நிபுணர்கள் செயலிழக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து லாகூர் முழுவதும் பீதி நிலவுகிறது. பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் pakistan பாகிஸ்தான் தாக்குதல் கிரிக்கெட் sri lanka இலங்கை shoot out team அணி bomb வெடிகுண்டுகள் stadium ஸ்டேடியம்
Story first published: Tuesday, March 3, 2009, 15:46 [IST]