For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்ணாவிரதப் போராட்டம் - 9ம் தேதிக்கு மாற்றினார் ஜெ.

By Sridhar L
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிற 10ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று திடீரென அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது போராட்டத்தை 9ம் தேதியே மேற்கொள்ளப் போவதாக தற்போது அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் அ.தி.மு.க. சார்பில் 10-ந் தேதி நடைபெறுவதாக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மேற்படி உண்ணாவிரத அறப்போராட்டம் 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X