For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

26-22: பாஜக-சிவசேனை தொகுதிப் பங்கீடு

By Sridhar L
Google Oneindia Tamil News

டெல்லி: ஏகப்பட்ட இழுபறிக்குப் பின் பாஜக-சிவசேனை இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இருந்து வந்தாலும் கடந்த சில ஆண்டுகளுகாகவே இரு கட்சிகளுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.

பிரதமர் வேட்பாளராக அத்வானியை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், மராட்டியரான சரத்பவார் தான் பிரதமராக வேண்டும் என்றும் சமீப காலமாக குண்டு போட்டு வருகிறார் சிவசேனை தலைவர் பாஸ். தாக்கரே. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகமானது.

இதையடுத்து ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட அமைப்புகள் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கின. இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

வரும் தேர்தலில் மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகிதிகளில 26ல் பாஜகவும் 22ல் சிவசேனையும் போட்டியிடுவது என்று முடிவாகியுள்ளது.

ஆனால், தேர்தலுக்குப் பின் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாதக் கட்சியின் தலைவர் பவார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் பாஜக கூட்டணியைவிட்டு சிவசேனை வெளியேறி பவாரை ஆதரிக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X