For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லஞ்சம்: சப்-இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு

By Sridhar L
Google Oneindia Tamil News

விளாத்திகுளம்: லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து விளாத்திகுளம் சப் இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வசந்தரராஜ். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பணிபுரிந்தார். அப்போது அங்கு அவர் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து லஞ்ச ஓழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் விளாத்திகுளத்திற்கு மாற்றப்பட்டார்.

இடமாற்றம் செய்யப்பட்டபோதிலும் குற்றச்சாட்டு அடிப்படையில் அவர் மீது துறைவாரியாக விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உண்மை என்பது விசாரணை முடிவில் தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை நெல்லை டிஐஜி கண்ணப்பன் பிறப்பித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X