For Quick Alerts
For Daily Alerts
Just In
'சந்தை'க்கு இரண்டு நாள் லீவு!
மும்பை: 2005க்குப் பிந்தைய மோசமான சரிவை சென்செக்ஸ் நேற்று சந்தித்த நிலையில் மீலாடி நபி மற்றும் ஹோலி பண்டிகைகளையொட்டி இரு தினங்கள் பங்கு சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாணய மாற்றுச் சந்தை, பத்திரங்கள் மாற்று மையங்களும் இந்த இரு தினங்களும் மூடப்பட்டிருக்கும்.
சென்செக்ஸில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான வீழ்ச்சி நேற்று நிலவியது. உலக பங்குச் சந்தைகளில் இதை விட இன்னும் மோசமான சூழலே நிலவுகிறது.
இந்த இரண்டு நாள் விடுமுறையை ஒருவித தற்காலிக நிம்மதியாகவே பல பங்கு வர்த்தகர்களும் கருதுகிறார்கள். கடந்த வாரமும் நேற்றைய வர்த்தகத்திலும் ஏற்பட்டுள்ள நஷ்டத்தைச் சரிகட்டவே பல மாதங்கள் பிடிக்கும் என்கின்றனர் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்துள்ள பங்கு வர்த்தகர்கள்.
விடுமுறைக்குப் பிறகாவது வர்த்தகம் விறுவிறுப்பாக நடக்குமா... பார்க்கலாம்!
Comments
Story first published: Tuesday, March 10, 2009, 12:21 [IST]