குழந்தைகளை கொன்ற மனநோயாளி தாய்மாமன்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தனது அக்காளின் குழந்தைகள் இருவரை கொடூரமாக தாக்கி, கொலை செய்த மனநோயாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சித்ரா தேவி. இவர்களுக்கு கவிதா (7) , கோகுல்தாஸ்(4) என்ற குழந்தைகள் இருந்தனர்.
சித்ராதேவியின் தம்பி அருள்செல்வன் (27) மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் சித்ரா தேவி வீட்டில் தங்கியிருந்தார்.
காலை சித்ரா தேவியு விட்டு வெளியே சென்றிருந்தார். குழந்தைகள் கவிதா, கோகுல்தாஸ் ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அருள் செல்வன் அருகில் இருந்த கட்டையை எடுத்து அந்த இரு குழந்தைகளும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இதில் கவிதா சம்பவ இடத்திலே துடிதுடித்து பலியானார். படுகாயமடைந்த கோகுல்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அருள் செல்வனை கைது செய்தனர்.