கேரளா-தேர்தல் தேதி மாறுகிறது?
திருவனந்தபுரம்: ஏப்ரல் 9ம் தேதி புனித வெள்ளியும், ஏப்ரல் 12ம் தேதி ஈஸ்டர் பண்டிகையும், ஏப்ரல் 14ம் தேதி விஷு பண்டிகையும் வருவதால் கேரளத்தில் மக்களவைத் தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் கோரியுள்ளன.
கேரளத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 16ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி திருவனந்தபுரம் வந்தார்.
அவரை இந்திய கம்யூனிஸ்ட், பாஜக கட்சிப் பிரதிநிதிகள் தனித்தனியாக சந்தித்து தேர்தலை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
கேரள மக்களால் கொண்டாடப்படும் விஷு பண்டிகை ஏப்ரல் 14ம்ந் தேதியும், கிருஸ்துவர்கள் கொண்டாடும் புனிதவெள்ளி ஏப்ரல் 9ம் தேதியும், ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 12ம் தேதியும் வருவதால் இந்தப் பண்டிகைகளுக்கு ஒரு வாரமாவது கால அவகாசம் அளித்து தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தினர்.
இதனால் கேரளத்தில் தேர்தல் தேதி மாற்றப்படும் என்று தெரிகிறது.