'சங்கரராமன்'-விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட அப்பு
காஞ்சிபுரத்தில் நடந்த இந்தக் கொலையில் சங்கராச்சாரியார் ஜெயந்திரர், விஜயேந்திரர், அப்பு என்ற கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையி்ல அப்பு தனது மனைவி நிர்மலாவுடன் நேற்று முன் தினம் அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தார். சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏற இருந்த அவரது பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்த அதிகாரிகள் அவர் வெளிநாடு செல்ல ஏற தடை விதித்துவிட்டனர்.
அப்போது அப்பு, நான் அந்த வழக்கில் ஜாமீனில் இருக்கிறேன். மேலும் வழக்கு நடக்கும் புதுச்சேரி கோர்ட்டில் வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ளேன் என்றார்.
இதையடுத்து அந்த உத்தரவை வாங்கிப் பார்த்தனர் அதிகாரிகள். அதில் 4 மாதம் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த அனுமதி நள்ளிரவு 12 மணியுடன் முடிந்து விட்டதாகக் கூறி அவரை விமானம் ஏற அனுமதிக்கவில்லை எமிக்ரேசன் பிரிவு அதிகாரிகள்.
இதையடுத்து அப்புவும் மனைவியும் திரும்பி சென்றனர்.