செலவுக் குறைப்பு: டிஜிட்டல் கையெழுத்துக்கு மாறிய வங்கிகள்!!
வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும் கடன் அட்டை அறிக்கைகள், பங்கு வர்த்தகர்களுக்கு அனுப்பப்படும் மின்னணு குறிப்புகள், தரகு பரிமாற்றங்கள், சாதாரண வங்கிக் கணக்குகள் என அனைத்தும் இப்போது டிஜிட்டல் கையெழுத்துடனேயே அனுப்பப்படுகின்றன.
அது என்ன டிஜிட்டல் கையெழுத்து?
எச்டிஎப்சி வங்கி, சிட்டி, ஏபிஎன் ஆம்ரோ போன்ற வங்கிகளின் அறிக்கைகள் மற்றும் குறிப்பேட்டு நகல்கள் அனைத்தின் வலது மூலையிலும் கையொப்பமிடும் இடத்தில் கைப் பெருவிரல் ரேகையும் அதன் மேல் கையொப்ப முத்திரையும் இருப்பதைக் காணலாம். இதுதான் டிஜிட்டல் கையெழுத்து.
இந்தக் கையெழுத்தால் நேரமும் மிச்சம், பேப்பர், இங்க் என எழுதுபொருள்கள் செலவும் குறைவாகிறதாம்.
'டிஜிட்டல் கையெழுத்துக்கு நம்பகத்தன்மை அதிகம். யாராலும் ஏமாற்றவும் முடியாது, போலிக் கையெழுத்தும் போட முடியாது. அதனால்தான் இந்த மாறுதல்...' என்கிறார் ராபர்ட் ராஜா. இவர்தான் இந்த டிஜிட்டல் டெக்னாலஜி சாப்ட்வேரை வங்கிகளுக்கு வழங்கியிருக்கும் ஒடிஸி டெக்னாலஜிஸ் தலைவர்.
இதனால் செலவு எவ்வளவு குறையும்?
'ஒன்றுமில்லை... 1 கோடி வங்கி ஸ்டேட்மெண்டுகளை அனுப்ப ஜஸ்ட் சில ரூபாய்கள் தான் செலவாகும்!' என்கிறார் எச்டிஎப்சி வங்கி அதிகாரி மித்தல்.
அப்ப... சரிதான்!