For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்குச் சந்தை: அமர்க்களமான ஆரம்பம்!

By Sridhar L
Google Oneindia Tamil News

மும்பை: வங்கித் துறைப் பங்குகளுக்கு வந்த திடீர் மவுசு காரணமாக இன்று பங்குச் சந்தை எடுத்த எடுப்பிலேயே 200 புள்ளிகள் வரை உயர்ந்து களை கட்டத் துவங்கியுள்ளது.

ரியல் எஸ்டேட்ஸ் மற்றும் உலோகத் துறை நிறுவனப் பங்குகளும் நல்ல உயர்வைச் சந்தித்துள்ளன.

காலை 11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 171 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இதன் மூலம் 9000 புள்ளிகளைக் கடந்துள்ளது சென்செக்ஸ்.

நிப்டியிலும் இன்று பரபரப்பான வர்த்தகம். காலையிலேயே 51 புள்ளிகள் வரை உயர்வைக் கண்டுள்ளது நிப்டி. இதனால் சிறிது இடைவெளிக்குப் பிறகு 2800 புள்ளிகள் என்ற நிலையைக் கடந்துள்ளது.

வழக்கத்தை விட நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன, இதர ஆசியப் பங்குச் சந்தைகளும். அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் 178 புள்ளிகள் உயர்வைக் கண்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X