For Daily Alerts
Just In
டெல்லியில் அன்புமணியுடன் ராசா-பொங்கலூர் பழனிச்சாமி பேச்சு
முன்னதாக சென்னையில் அமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் பாமக தலைவர் ஜி.கே.மணி. அப்போது 8 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டது பாமக.
ஆனால், பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் தர திமுக ஒப்புக் கொண்டுள்ளது. மேற்கொண்டு பேசும் முன் முதலில் கூட்டணியில் சேருமாறு பாமகவிடம் திமுக கோரிக்கை வைத்தது.
திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸை நிர்பந்தித்து வருவது அன்புமணியே. இந் நிலையில் ஆ.ராசாவும் பொங்கலூர் பழனிச்சாமியும் டெல்லியில் அவருடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ராமதாஸ் மற்றும் அன்புமணியுடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமத் படேல் ஆகியோரும் தொலைபேசியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக ராமதாஸ் கூட்டணி தேர்தல் பேச்சு ramdoss pmk பாமக டெல்லி anbumani அன்புமணி raja election 2009 பழனிச்சாமி mani ராசா
Story first published: Wednesday, March 18, 2009, 9:54 [IST]