For Daily Alerts
Just In
ஜார்ஜ் பெர்னாண்டஸ், திக்விஜய் சிங் சுயேச்சையாகப் போட்டி
டெல்லி: ஐக்கிய ஜனதாதள கட்சியில் சீட் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ள மூத்த தலைவர்களான ஜார்ஜ் பெர்னாண்டஸும், திக் விஜய் சிங்கும் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
கடந்த இருபது ஆண்டுகளாக ஒரு தேர்தலையும் விடாமல் தொடர்ந்து போட்டியிட்டு வருபவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். ஆனால் இந்த முறை அவருக்கு சீட்டே தரவில்லை ஐக்கிய ஜனதாதளக் கட்சி மேலிடம்.
இதனால் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். சீட் தருமாறு கட்சியை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கிடைக்காவிட்டால், பீகார் மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான முசாபர்பூரில் சுயேச்சையாக நிற்க முடிவு செய்துள்ளார் ஜார்ஜ்.
அதேபோல இன்னொரு மூத்த தலைவரான திக்விஜய் சிங்குக்கும் கட்சி சீட் தரவில்லை. இதனால் பாகா தொகுதியில் அவர் சுயேச்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளார்.
Comments
Story first published: Saturday, March 21, 2009, 12:58 [IST]