ராஜுவிடம் சிபிஐ மேலும் இரண்டு நாள் விசாரணை!
ரூ.7800 கோடி மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இந்த மூவரையும் மார்ச் 10-ம் தேதி முதல் 17-ம் தேதிவரை தங்கள் பொறுப்பில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்திருந்தது ஹைதராபாத் 14-வது பெருநகர நீதிமன்றம்.
இப்போது மேலும் சில தகவல்கள் பெறுவதற்காக ராஜு சகோதரர்கள் மற்றும் வாட்லாமணியை கூடுதலாக இரு தினங்கள் விசாரணை செய்ய வேண்டும் என சிபிஐ கோர்ட்டில் விண்ணப்பித்திருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சனிக்கிழமை முதல் மேலும் இரு தினங்களுக்கு இவர்களை சிபிஐ தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தனர்.
7 உயர் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் பலனாய்வுக் குழு, ராஜு சகோதரர்கள் மற்றும் வாட்லாமணியை விசாரிக்கிறது.
இந்த விசாரணையின் போது காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், மீண்டும் 3 மணி முதல் 4 மணி வரையிலும் ராஜுவின் வழக்கறிஞர்கள் உடனிருக்கலாம் என்றும் கோர்ட் அனுமதித்துள்ளது.