For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொட்டு அம்மான் வீடு பிடிபட்டது-ராணுவம்

By Sridhar L
Google Oneindia Tamil News

Pottu Amman - house
கொழும்பு: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் தங்கியிருந்த வீட்டைப் பிடித்துள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.

ராணுவத்தின் 58வது பிரிவு, இந்த வீட்டைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை பொட்டு அம்மானும், புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கபில் அம்மானும் பயன்படுத்தி வந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம், இரணைப்பாலை என்ற இடத்தில் இந்த வீடு இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. கடும் சண்டைக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை வீடு சிக்கியதாகவும் ராணுவம் கூறுகிறது.

இந்தப் பகுதியில் ஒரு ஜீப் ஒன்றும் கிடைத்துள்ளது. அதை பொட்டு அம்மான் பயன்படுத்தி வந்ததாக ராணுவம் சந்தேகிக்கிறதாம்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில், அவரது மகன் சார்லஸ் அந்தோணி, பொட்டு அம்மான் ஆகியோரே தற்போது போரை முன்னின்று நடத்தி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் பொட்டு அம்மான் பயன்படுத்திய வீட்டைப் பிடித்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X