மதுபான ஆலையை எதிர்த்து கம்யூ. உண்ணாவிரதம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மதுபான ஆலை அமைப்பதை எதிர்த்து சிபிஎம், சிபிஐ கட்சியினர் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை அருகில் கல்லாக்கோட்டை உள்ளது. இங்கு கால்ஸ் என்னும் வெளிநாட்டு மதுபான ஆலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆலையின் செயல்பாட்டால், நிலத்தடி நீர் குறைவதோடு, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து உருவாகும் என்று கூறி அப்பகுதி மக்களும், அதிமுக, சிபிஎம், சிபிஐ, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், மதுபான ஆலைக்கு தடை விதிக்க கோரி கந்தர்வக்கோட்டையில் சிபிஐ, சிபிஎம் கட்சியினர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரதத்தை ஆலங்குடி எம்எல்ஏ ராஜசேகரன் துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் முடித்து வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.