For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலெக்டரின் பி.ஏவுக்கு அடி உதை-வாலிபர் கைது

By Sridhar L
Google Oneindia Tamil News

அரியலூர்: அரியலூரில் கலெக்டரின் உதவியாளருக்கு அடி உதை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை அருகேயுள்ள சுந்தரப்பொருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(39).

இவரது தந்தை நிலப்பிரச்சனை தொடர்பான விசாரணை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த விசாரணைக்காக லட்சுமணன் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

அப்போது, மாவட்ட கலெக்டரின் உதவியாளர் ஜெயசந்திரன் வழக்கு விசாரணைக்கு உங்கள் தந்தை தான் வர வேண்டும் என்று லட்சுமணனிடம் கூறி வழக்கு விசாரணையை மே 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயசந்திரனை திடீரென கீழே தள்ளி அடித்து உதைத்தார்.

இதில் ஜெயசந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயசந்திரன் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் அரியலூர் போலீசார் லட்சுமணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X