சிதம்பரத்திற்குப் பதில் கடலூரில் போட்டியிட திருமா. யோசனை
நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்துவிட்ட நிலையில் திமுக 21, காங்கிரஸ் 16, விடுதலை சிறுத்தைகள் 2 மற்றும் முஸ்லீம் லீக் 1 தொகுதியில் போட்டியிடுகின்றன.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று சிதம்பரம் (தனி) தொகுதி.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சிதம்பர தொகுதியில் நிற்க முடிவு செய்திருந்தார். இந்நிலையில் அதிமுக தனது கூட்டணியான பாமகவுக்கு சிதம்பரம் தொகுதியை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து எதிர் அணியில் இருந்தாலும் தனக்கு நெருங்கிய பாமகவுக்கு எதிராக திருமாவளவன் போட்டியிட விரும்பவில்லை என தெரிகிறது.
இதையடுத்து திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு பதிலாக கடலூரில் நிற்க விரும்பவதாகவும், இதன் மூலம் பாமகவுக்கு எதிராக போட்டியிடுவதை தவிர்க்க முயற்சிக்க அவர் யோசித்து வருகிறார்.
விழுப்புரமும் பரிசீலனையில் ..
அதேபோல கடலூர் இல்லாவிட்டால் விழுப்புரத்தில் போட்டியிடவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருமாவளவனுக்கு யோசனை சொல்லியுள்ளனர்.
எனவே இரு தொகுதிகளில் ஒன்றில் திருமா போட்டியிடலாம். சிதம்பரத்தில் நிற்க வாய்ப்புகள் குறைவு என கருதப்படுகிறது.