For Daily Alerts
Just In
தர்மபுரியில் செந்தில் மீண்டும் போட்டி
1998ம் ஆண்டு பாரிமோகன் தர்மபுரியில் வெற்றி பெற்றார். 1999ம் ஆண்டு பு.தா. இளங்கோவன் எம்.பி. ஆனார். பின்னர் அடுத்து நடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் இளங்கோவனுக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் அவர் பாஜகவில் சேர்ந்து போட்டியிட்டார்.
இத் தேர்தலில் புதுமுகமான செந்திலை களம் இறக்கினார் டாக்டர் ராமதாஸ். செந்தில் 2.16 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவனைத் தோற்கடித்தார்.
தொகுதியில் செந்தில் மீது பெரிய அளவில் அதிருப்தி கிடையாது. வன்னியர்களின் வாக்கு வங்கியை பெரிதும் நம்பி நிற்கிறது பாமக.
கூடவே அதிமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கரம் கோர்த்திருப்பதால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் உள்ளது பாமக.
Comments
Story first published: Monday, March 30, 2009, 17:09 [IST]